
வெறிச்சோடியிருந்த
என் இரவுகளை
வெளிச்சமாக்கி
விடியலில் மறைகிறாய்..
பகலில் அங்குமிங்கும்
தேடி அலுத்துத் திரும்புமெனக்கு
மீண்டும் இரவில்
தரிசனம் தருகிறாய்..
சபிக்கப்பட்ட நொடிகளை
வாரமாக்கியும்
வரமான நாட்களை
சபித்தும்
விளையாடுமுனக்கு
தெரிந்துதானிருக்கும்
உன் வரவில்
புதுப்பிக்கப்படுகிறேனென...
No comments:
Post a Comment