Wednesday, October 28, 2009

உன் வரவு..


வெறிச்சோடியிருந்த
என் இரவுகளை
வெளிச்சமாக்கி
விடியலில் மறைகிறாய்..

பகலில் அங்குமிங்கும்
தேடி அலுத்துத் திரும்புமெனக்கு
மீண்டும் இரவில்
தரிசனம் தருகிறாய்..

சபிக்கப்பட்ட நொடிகளை
வாரமாக்கியும்
வரமான நாட்களை
சபித்தும்
விளையாடுமுனக்கு
தெரிந்துதானிருக்கும்
உன் வரவில்
புதுப்பிக்கப்படுகிறேனென...

No comments: