Monday, October 12, 2009

சந்திக்க..

இன்றாவது
சந்தித்துவிடுவேன்
என்றுதான்
ஒவ்வொருநாளும்
தயாராகிறேன்..
தட்டிக்கழித்தே போகிறாய்..
நடுநிசியில்
வீட்டிற்குத் திரும்புகிறேன்..
ஏமாற்றங்களை
வாசலில் விட்டுவிட்டு..
எதிர்பார்ப்புகளை
மடித்துத் தலைக்கு
வைத்துவிட்டு
மீண்டும் தயாராகிறேன்..
நாளையேனும்
உன்னை சந்திப்பேனென..

No comments: