Thursday, October 08, 2009

அனுமதிக்கிறேன்..

அவ்வப்போது
இருசக்கர வாகனங்களில்
மகிழுந்துகளில்
பேருந்துகளில்
சில நேரங்களில்
நடந்தபடி
பின் தொடர்கிறாய்
என்னை அடைய..
கேட்டுக் கொள் மரணமே
என்னை நேசிக்க
யாருமில்லாத போது
நீயென்னை
நேசிக்க அனுமதி தருகிறேன்..

No comments: