Friday, October 16, 2009

குழந்தையென..

எல்லாவற்றையும்
விளையாட்டாக
எடுத்துக் கொள்வதைப் போலவே..
என் கண்ணீரையும்
வலிகளையும் கூட
எடுத்துக் கொள்கிறாய்..
யாரழைத்த போதும்
முகம் காட்டாமல்
தேம்பியழும் அவை
தேற்றுவாரின்றி
குழந்தையென ஓடி ஒளிகிறது
உன் பின்னால்..

No comments: