Thursday, December 31, 2009

சமபலம்

காலையில்
என் முன் நிற்கும் போது
உன் பலத்தில் பாதியை
எடுத்துக் கொள்கிறேன்..

மாலையில்
உன் முன் நிற்கும் போது
என் பலத்தில் பாதியை
எடுத்துக் கொள்கிறாய்..

இரவு வரட்டும்
இருவரும் சமபலத்தோடு
சந்திப்போம்..
என் பலத்தை
உனக்கு முழுதாகவும்
உன் பலத்தை
எனக்கு முழுதாகவும்
பரிமாறிக் கொள்ள..

No comments: