Thursday, December 31, 2009

மறதி-பசி

ஒரு பொருளை
எடுத்த இடத்தில் வைப்பதில்லை..
வைத்த இடமும் ஞாபகத்தில்
இருப்பதில்லையெனவும்.. 
முன்னர் வாங்கிவரும்
தின்பண்டங்களை ஒன்று விடாமல்
காலி செய்யும் நான்
இப்போதெலாம்
சாப்பிடுவதேயில்லையெனவும்
வருத்தமுற்ற அம்மா
மறதியொழிக்க வல்லாரைச் சட்டினியும்
பசியெடுக்க பிரண்டைத் துகையலும்
உண்ணத் தருகிறாள்..
அவளுக்கெப்படித் தெரியும்?
உன்னை நினைத்து
மற்ற அனைத்தையும் மறப்பதும்..
பசலையால் பசியெடுக்காதிருப்பதும்..

No comments: