
நதியென மாற்றினாய்..
போருக்குனம் கொண்டவளை
பொறுமை கொள்ள செய்தாய்..
நெருஞ்சியாக இருந்தவளை
நேசத்தை உடுத்த வைத்தாய்..
ஊரூராய் திரிந்தவளை
ஓரிடத்தில் அமர வைத்தாய்..
வெளிகளை கடந்தவளை
உன் இதய திசைகாட்டி
இயங்க பணித்தாய்..
இன்னும் என்ன
செய்வதாக உத்தேசம்..?
சொல்லிவிடேன்..
ஒத்திகை பார்க்கலாம்..
No comments:
Post a Comment