Tuesday, December 01, 2009

துடிப்பு

உன்னில் இடம் கேட்டு
உன்னையே சுற்றிவந்து
அடம்பிடித்த இதயத்தை
ஆற்றுபடுத்தி
திருப்பி அனுப்பினாய்..
மனமுடைந்த  நிலையில்
முடிவை நோக்கி
பயணிக்கையில்
நீ இடம் கொடுக்க
துணிந்து எழுப்புகிறாய்..
அது தன் துடிப்பினை 
கேட்கும் சக்தியையும்
இழந்து வெகுநேரமாகிறது..

No comments: