Tuesday, December 08, 2009

முரணாய் இயங்கு


வேகத்தைக்
கூட்டிக் குறைத்து செல்கிறேன்..
நினைவுகளும்
அவ்வாறே  இம்சிக்கிறது...
காரணங்கள் ஏதுமின்றி
உணர்வுகள்
சில நிமிடங்களுக்கொரு முறை
மாறி மாறி மறைகின்றன..
இன்னும் இன்னுமாய்
என்னை நானே
அதிகம் நேசிப்பதாகவும்
வெறுப்பதாகவும்
முரணாய் இயங்குகிறேன்...
எப்படி
இவைகளுக்கு
முடிவு கட்டுவதென
தடுமாறி தத்தளிக்கிறேன்..
மீட்டுச் செல்லவோ
மீட்டிச் செல்லவோ
யாருமின்றி...

No comments: