Wednesday, December 30, 2009

சில கனவுகளும் நிஜங்களும்

ஒரு வெண்ணிற இரவு
ஒரு பிறை நிலவு
ஒரு சிறகு முளைக்காத வண்ணத்துப்பூச்சி
ஒரு உறங்காத பல்லி
அமைதி நிலையில் கைப்பேசி
ஒரு சுவர்க் கடிகாரம்
இவற்றோடு
நான்கறை கொண்ட இதயமொன்றும்
மேலிமையும் கீழிமையும் இணையாத இரு கண்களும்
காத்திருக்கின்றன உன் வருகையை எதிர்பார்த்து
சில கனவுகளும் நிஜங்களும் கூட.. 

No comments: