Thursday, December 31, 2009

கண்ணாமூச்சி

''கண்ணாமூச்சி ரே ரே
கண்டுபிடி யாரு? ''
கண்ணைக் கட்டிவிட்டு
ஒரு சுற்று சுற்றிவிட்டு
தோழிகள் ஓடி ஒளிந்தனர்..
எதிரே வந்த நீ
உன்னையும் கண்டுபிடிக்கச்
சொல்லிக் கேட்கிறாய்?
உன் குரலை
கேட்டு உள்ளுக்குள்
மகிழ்ந்த நான்
நெஞ்சில் கைவைத்துக் கொண்டேன்..
உள்ளே ஒளிந்திருக்கும்
உன்னை வெளியே
எப்படி தேடுவது?

No comments: