Tuesday, December 29, 2009

சுவடு

தாமதமாகியும்
வராத உன்னை எண்ணியதில்
அணை உடைத்து
வெளியேறும் கண்ணீர்
தலையணை நனைக்கிறது..
விடிகாலையில்
வீடு திரும்பிய நீ
அழுகையின் சுவடுகள்
கண்டு பதறி
கையணைத்து
முத்தமிட்டு
நெஞ்சணைத்து
அடைகாத்தாய்..
விடியல் தாண்டி எழுகிறேன்..
கண்ணீரின் பாதைகளில்
உன் இதழ்கள்
பயணித்த சுவடுகள் கலந்திருந்தது..

No comments: