
விடாமல் பேசியவளை
ஆற்றுப்படுத்தி
தூங்கும்வரை
விழித்திருந்தாய் ..
விடிந்தபின் பார்க்கிறேன்
நாற்காலியில் அமர்ந்தபடியே
உறங்கி போயிருக்கிறாய்..
எழுந்திரு அன்பே எனும்
என் வார்த்தை
உன் காதுகளை
எட்டாமல் திரும்ப..
இன்னும் நெருங்கி
உன் காதுமடலருகில்
என் மூச்சின் வெப்பத்தை
செலுத்துகிறேன்..
இமை திறந்தாய்..
இதழ் சேர்த்து..
No comments:
Post a Comment