
கியா கியா தாம்பாளம்''
எனப்பாடி விரலிடுக்கில்
என் இதயம் சொருகி
மேடான மண்ணுக்குள்
மறைத்து வைக்கிறேன்..
உன் விழி பார்த்திருக்க..
ஓரிடத்தில் இரு கை சேர்த்து
மண்ணில் பொத்துகிறாய்..
அவ்விடம் தவிர
வேறிடத்தில் தேடுகிறேன்..
புதைத்து வைத்த இதயத்தின..
உன் கைக்குள் மறைந்திருந்ததை
'குச்சி'என எடுத்து சிரிக்கிறாய்..
அது குச்சியல்ல..'இதய'மென
எப்படிச் சொல்வேன்..?
No comments:
Post a Comment