Monday, December 28, 2009

பைத்தியம் ..


மேகம் மறைக்க
மறைந்திருப்பதும்
விலக ஒளிர்ந்திருப்பதுமான
நிலவைப் போல்
உன்னிடமிருந்து
குறுஞ்செய்தி ஏதேனும் வந்திருக்கிறதா?
அழைப்பு ஏதேனும் தவற விட்டுவிட்டோமா?
என நள்ளிரவு போதில்
இடையிடையே விழித்து பார்த்துவிட்டு
உறங்குவதே வாடிக்கையாகிவிட்டது..
கடந்த ஆறுமாத காலமாய்..
கண்டுபிடித்துவிட்டாயா..?
இந்த கவிதையில்..
எவ்வளவு காலமாய்
எனக்கு பைத்தியம்
பிடித்திருக்கிறதென..

No comments: