Thursday, December 31, 2009

கண்கள்..

உன்னிரு கண்களில்
என்னவெல்லாம்
ஒளித்து வைத்திருக்கிறாயோ?
ஒருமுறை நிலவும் குளிர்ச்சியையும்,
இரவின் இணக்கத்தையும்..
ஒருமுறை நேசத்தின் நெருக்கத்தையும்,
நெருப்பின் தாக்கத்தையும்..
ஒருமுறை கவர்ந்தும் கடந்தும்,
கடத்தியும் படுத்தியும்..
ஒருமுறை மயங்க வைத்தும்,
தெளிய வைத்தும்..
என்னை பாடாய்படுத்தி விடுகிறது..
என்னதான்
ஒளித்து வைத்துள்ளாய்
உன் கண்களில்..
என் பிம்பங்களை தவிர..

No comments: