Monday, November 02, 2009

சொற்கள்..


உன்னிடம்
சொற்களைத் தூதனுப்புகிறேன்..
வரவேற்று
உபசரித்து
யாதும் கேளாமல்
வழியனுப்புகிறாய்..

வெறுங்கையோடு
திரும்புமென் சொற்களை
கட்டிகொண்டழுகிறேன்..
உலர்கின்றன கண்ணீர்த் துளிகள்..

No comments: