Wednesday, November 25, 2009

இதம்

நீ கண்ணை மூடி
யோசிக்கும் போது
உனக்கு இதம் தருபவை
எதுவென்று கேட்டேன்..
இரவு வானம் 
இரு கைகள் கோர்க்கும் ஸ்பரிசம்
ஆட்டுக்குட்டிகள்
புத்தகங்கள்
தூவானம்
எங்கிருந்தோ
வருடிப்போகும் இசை..
இப்படி சொல்லி போனாய்..
எனக்கு உன் வார்த்தைகளைத் தவிர
வேறெதுவும் இதம் தருவதில்லை..                      
                     

No comments: