Friday, November 13, 2009

மழை..

இரவு எல்லா சன்னல்களையும்
தட்டி நம்மை அங்குமிங்கும்
தேடிய மழை
அலுத்துப் போய்
எல்லா வீட்டுக் கதவுகளையும்
தட்டியபடியே
அதன் போக்கில்
சென்றிருக்கிறது...
ஒரு வெள்ளத்தை
தான் வந்ததின்
அடையாளமாய் விட்டு..

No comments: