Saturday, November 14, 2009

ஒற்றை வார்த்தை..


சொற்கள் செயலற்று
கிடக்கின்றன..
பூக்கள் வாசம்ற்று
மலர்கின்றன..
காலம் பின்னோக்கி
நகர்கின்றது..
காரணங்கள் கேட்குமுனக்கு
எப்படி சொல்வது?
நீ ஆமோதிக்கவிருக்கும்
ஒற்றை வார்த்தையில்தான்
அவை தன் செயல்களை
ஒழுங்கமைத்துக் கொள்ள
முடியுமென..

No comments: