Friday, February 17, 2012

அறுவடை



உன்னை எந்த சமயத்திலும்
எந்த காரணத்திற்காகவும்
வெறுக்க மாட்டேன்..
ஏனெனில் வெறுப்பின்
வலியறிந்தவள் நான்..

மறுதலிக்கவோ
நிராகரிக்கவோ
புறக்கணிக்கவோ
உதாசீனப்படுத்தவோ
தெரியாது என் நேசத்திற்கு..

தெரிந்ததெல்லாம்
நேசிக்க மட்டுமே..
அதன் மூலம் காயம் கொள்ளவும்..

அதற்கு மேல்
இம்மியும் அறிந்திராத
என் நேசத்தை உனக்குள்
விதைத்திருக்கிறேன்..

அதன் நிழலில்
நீ இளைப்பாறும்
நாள் வரும்வரை
விலகியிருக்கட்டும்
நம் இருவருக்குமான
நெருக்கம்...

அந்த விலகலில் 
துளிர்த்துக் கொண்டே இருக்கும்
யாராலும் அறுவடை செய்து 
முடிக்க முடியாத
பெரும் விளைச்சல்..

1 comment:

Lareena said...

//மறுதலிக்கவோ
நிராகரிக்கவோ
புறக்கணிக்கவோ
உதாசீனப்படுத்தவோ
தெரியாது என் நேசத்திற்கு..

தெரிந்ததெல்லாம்
நேசிக்க மட்டுமே..
அதன் மூலம் காயம் கொள்ளவும்..//

அருமையான வரிகள் சகி! நாள் முழுதும், கிடைத்த அவகாசங்களில் எல்லாம் படித்துக்கொண்டே இருக்கிறேன் உன் கவி வரிகளை, இதற்குமுன் அறிமுகப்படுத்தத் தவறிவிட்டாயே என்ற செல்லக் கோபத்துடன்... :)