Friday, February 17, 2012

வெற்றிடத்தின் கடைசிப் புள்ளி


அந்த கணம் அப்படியே
நெஞ்சில் ஆழ உறைந்துவிட்டது

கேள்விகளும்
எதிர்கேள்விகளுமாய்
கடந்து போன நிமிடத்தின்
பதற்றங்கள் இன்னும் தணியவில்லை

சிரித்துப் பேசியபடியோ
கொஞ்சிப் பேசியபடியோ
நெருங்கும்போது
முந்தைய கோபக்கங்குகளின்
அனலை உணர்கிறேன்

இருவருக்குமிடையில்
விழத் துவங்கியிருக்கும்
வெற்றிடத்தை
எதைக் கொண்டு நிரப்புவதென
சிந்திக்கிறேன்..

உனது கேள்விகளை
உனது கோபங்களை
எந்தவித கவசமுமின்றி
எதிர்கொள்வதென
இப்போதைக்கு
உத்தேசித்துள்ளேன்..

வெற்றிடத்தின்
கடைசிப் புள்ளி மறையும்போது
நாம் மேற்கொண்டு பேசலாம்
ஒரு நண்பனைப் போல் நீயும்
ஒரு தோழியைப் போல் நானும்

No comments: