Friday, February 17, 2012

வெறுமைக் கோப்பை



 நிரம்பிருந்த என் வெறுமைக் கோப்பைகளை
ஒவ்வொன்றாய் களவாடிப் போனாய்..
துயர் வழிந்திருந்த என் காலச் சருகுகளை
காற்றாகவே பறக்க செய்தாய்..
தேம்பித் திரிந்த என் மௌனங்களை
சொட்டு சொட்டாய் விடுவித்தாய்..
சமரசத்திற்குடன்படாத என் நேசத்தை
உடன்படிக்கை ஏதுமின்றி பாதுகாத்தாய்..
விதை பழுதா? நிலம் பழுதா? கேட்டு
முடிக்கும் முன் அறுவடைக்கு வந்து நின்றாய்..
பிழை என்னிலா? அவனிலா?
எந்த கேள்வியின் எழுப்புதலுமின்றி
என்னுடனே வாழ சம்மதித்தாய்..
என்னில் எதுவுமின்றி உன்னிடம் வருகின்றேன்..
உன்னை நிரப்பி என்னை ஆளச் செய் இப்பேருலகை.. 

No comments: