இன்றிரவு பெய்த மழையை
ரசிக்க முடியவில்லை..
தன் வெண்துளி கரங்களால்
விடாமல் துரத்திய அதன் ஆக்கிரமிப்பு
ஐம்புலன்களையும்
சுருக்கிக் கொள்ள இட்டக் கட்டளை..
சேர்க்கையின் குறியீடெனவிருந்த நினைவுகளை
பிரிவின் குறியீடாக மாற்றிவிட்டது..
ஆழப்புதைந்த மதிப்பீடுகளை
அர்த்தமிழக்க செய்தததில்
மழைக்கு பங்குண்டு..
துயரும் புதிருமான முந்தைய நிகழ்வுகளுக்கு
முன்னொரு மழைக்காலம் சாட்சி எனும்
ஒரே காரணத்திற்காக..
No comments:
Post a Comment