எல்லா உணர்ச்சிகளையும்
புதைத்துவிட்டு
எப்போதும் புன்னையுடன் இருக்கிற
கடை பொம்மையைப் போல
இருக்க வேண்டுமென்ற
எதிர்பார்ப்புகளை ஒருபோதும்
நிறைவேற்ற தெரியவில்லை
ஊமையாகவோ,
காது கேளாதவளாகவோ
பிறந்திருக்கலாமோவென
நினைக்கத் தோன்றுகிறது
சில சமயங்களில்
தற்கொலை செய்துகொண்டு விடுவேனோ
எனும் பயம் தொற்றிக் கொள்கிறது..
கண்ணீர் ததும்பி
கணிணி திரையினை
மறைக்கிறது..
கைகள் நடுங்கி
விரல்கள் உதிர
கீபோர்டிலுள்ள எழுத்துகளும்
சேர்ந்து உதிர துவங்கின..
No comments:
Post a Comment