Friday, February 17, 2012

மூன்றாம் நபர்



காதலற்ற வாழ்விற்கும்
கவிதையற்ற வாழ்விற்கும்
சிறு நூலிழை வித்தியாசம்
ஏதும் இருப்பதாக தெரியவில்லை..

இரவுகள்தோறும் ஊறித் திளைத்த
இரண்டும் ஒன்றையொன்று
வெறித்துப் பார்த்ததன்
காரணமும் புரியவில்லை..

மிக நீண்ட போராட்டம்
தேவைப்பட்டதை
இரண்டின் வரவிலும்
உணர்ந்த கணத்தை மறக்கவில்லை..

வெற்றி தோல்வி குறித்த
அவசியமின்றி நகர்ந்த நொடிகளில்
நஞ்சு கலந்த துயரமொன்று
பரவிப் படர்ந்ததை கவனிக்கவில்லை..

எவர் கேள்விகளுக்கும்
பதில் சொல்ல தயாரில்லாத
இரண்டும் ஒருநாள்
தற்கொலை செய்துகொண்டதையும்
இதுவரை மூன்றாம் நபர் யாருக்கும்
தெரிவிப்பதற்கு
காதலோ கவிதையோ உயிருடன் இல்லை..

No comments: