Friday, February 17, 2012

அத்துணை உணர்வுகளின் கலவை


எனக்குள்
தேடித் திரிந்த
வேண்டி தவித்த
சொல்லத் துடித்த
அத்துணை உணர்வுகளின்
கலவையாக
உணரக் கிடைத்தாய்...

இனி எப்போதும்
உன்னை தவறவிடுவதற்கில்லை..
கடந்து போன
எனது பழைய பக்கங்களிலும்
உன்னை இட்டு நிரப்பியே
ஞாபகங்களை செம்மைப் படுத்துகிறேன்..

No comments: