Friday, February 17, 2012

சலனமற்றிருக்கும் எனதுடல்



மார்பு வலியில் விம்முகிறது
தொண்டை அடைக்கிறது
வயிற்றில் அமிலம் சுரப்பது
அப்படியே தெரிகிறது
கைகள் உதறல் எடுக்கிறது
மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது
வாந்தியோ, குமட்டலோ வருகிறது

நேசத்திற்குரியவர்களின்
அதி கோபத்தில்
வார்த்தைகளால்
அறையப்படும்போது
மேற்சொன்னவையெல்லாம்
தானாகவே நடக்கின்றன..
ஒருநாள் கூட்டைவிட்டு
பறந்துவிடவும் கூடும்
காற்றெனப்படும் உயிர். .

அப்போது வீசப்படும்
வார்த்தைகள் குறித்து
வலியோ, நடுக்கமோ, உதறலோ இன்றி
சலனமற்றிருக்கும் எனதுடல்..

No comments: