மார்பு வலியில் விம்முகிறது
தொண்டை அடைக்கிறது
வயிற்றில் அமிலம் சுரப்பது
அப்படியே தெரிகிறது
கைகள் உதறல் எடுக்கிறது
மூச்சுவிடுவதில் சிரமம் ஏற்படுகிறது
வாந்தியோ, குமட்டலோ வருகிறது
நேசத்திற்குரியவர்களின்
அதி கோபத்தில்
வார்த்தைகளால்
அறையப்படும்போது
மேற்சொன்னவையெல்லாம்
தானாகவே நடக்கின்றன..
ஒருநாள் கூட்டைவிட்டு
பறந்துவிடவும் கூடும்
காற்றெனப்படும் உயிர். .
அப்போது வீசப்படும்
வார்த்தைகள் குறித்து
வலியோ, நடுக்கமோ, உதறலோ இன்றி
சலனமற்றிருக்கும் எனதுடல்..
No comments:
Post a Comment