நகர்ந்து நகர்ந்து மறையும்
பயணக் காட்சிகளாய்
என் தேர்வுகளும் தேடல்களும்...
உருகி உருகி உறையும்
பனிக்கட்டிகளாய்
என் ஏக்கமும் எதிர்பார்ப்பும்..
விலகி விலகி இணையும்
தண்டவாளங்களாய்
என் நேசிப்பும் வாசிப்பும்..
தோற்க தோற்க முயலும்
மழைத்துளியாய்
என் பயணமும் பாதையும்..
இருள இருள ஒளிரும்
தொலைதூர வெளிச்சமாய்
என் கனவுகளும் கற்பனைகளும்
விழ விழ எழும்
கடலலையாய்
எனதின் நானும் நானின் எனதும்..
1 comment:
அற்புதமான வரிகள்!வரிகளின் இடையிலே மனசின் வலியை மிகத் தத்ரூபமாய் செதுக்கி உள்ளீர்கள்... வாழ்த்துக்கள் தோழி!
Post a Comment