Friday, February 17, 2012

இனி வரும் காலம்


என் கனவுகளின் நாயகனுக்கு....
உன் காதலுடன்
நான் நடந்து செல்லும் பாதையெங்கும்
பூத்துச் சிரிக்கின்றன
பெயர் தெரியா பூக்கள்..
பறந்து திரிகின்றன
பெயர் அறியா பறவைகள்..

உன் காதலுடன்
நான் நடந்து செல்லும் பாதையெங்கும்
சாரல் அடிக்கின்றது ...
பார்த்தறியா மேகத்திலிருந்து
கூதல் பிடிக்கின்றது 
உணர்ந்தறியா காற்றிலிருந்து..

உன் காதலுடன்
நான் நடந்து செல்லும் பாதையெங்கும்
பார்க்கும் முகங்கள்
உன் முகமாகின்றன..
கேட்கும் பெயர்கள்
உன் பெயராகின்றன..

ஏதுமற்ற
எதிர்பார்ப்புகளற்ற
பயணத்தினூடே
வழித்துணையாய் வந்து
வாழ்க்கைத் துணையானாய்

இதுவரை வாழ்வு கசந்தபோதும்
இனி வரும் காலம் வசந்தமாகும்


No comments: