Friday, February 17, 2012

ஒரு புன்னகையின் பின்னால்



சமாதானத்தை
முன்னெடுப்பதில்
இருவருமே சளைத்தவர்களில்லை

இம்முறை
சமாதானம் தேவையா?
என்கிற கேள்வி தொக்கி நிற்கிறது

ஒவ்வொருமுறையும்
என்னால் சமாதானத்திற்கு
முன்வைக்கிற புன்னகை குறித்து
அலட்சியம் வெளிப்படுகிறது உன்னிடம்

இம்முறை சமாதானத்துடன்
நெருங்குகிறாய்..
இனியெப்போது வேண்டுமானாலும்
எந்தபக்கமிருந்தும்
ஆபத்து நிகழக் கூடுமெனும்
எச்சரிக்கையுடன் ஏற்றுக்கொள்கிறேன்
ஒரு புன்னகையின் பின்னால்
வடிந்துகொண்டிருக்கும் கண்ணீரின் கணத்துடன்.

No comments: