Tuesday, September 15, 2009

விசில் சத்தம்..



தனது நடமாட்டத்தை
அறிவிக்கும்
விசில் சத்தத்தோடு
கடந்து போகும்
கூர்க்கா வெளிப்படுத்துகிறான்...
தெருக்களின் மீதான அக்கறையை..




இருளும் இம்மி ஒளியுமான
எனதறையிலிருந்து
எழும் கேவல்கள்
இன்னும் வீடுவந்து சேராத
அவனைத் தொட்டிருக்குமோ?

No comments: