Monday, September 14, 2009

மரணத்தின் வாழ்த்தோடு..


என்றாவது ஒருநாள்
உனது எல்லாத் தொடர்புகளிலிருந்தும்
முற்றிலும் துண்டிக்கப்படுவேன்..
அப்போது
மரணம் என்னைத்
தூக்கிச் சென்றிருக்கும்..
உனது தேடுதலில்
கண்டெடுக்கப்படும்
உயிரற்ற எனதுடலில்
சிந்தும் உன் கண்ணீர்
எனதுடலின் ஏதேனும்
ஒரு துளை வழி
நுழைந்தாலே
உயிர் பெற்று எழுவேன்..
மரணத்தின் வாழ்த்தோடு..

No comments: