
இளைப்பாறிச் சென்றதற்கான
அறிகுறிகளை
வழிநெடுகும் காண முடிந்தது..
நேற்று இரவில்
கையசைத்து புன்னகையும்
தூவிச் சென்ற
கீழ்வீட்டுக் குழந்தை
அசைவற்று
உதடுபிரியா புன்னகையுடன்
கிடத்தப்பட்டிருக்கிறது..
போனவாரம்
நேர்காணலுக்காகச்
சந்தித்த எழுத்தாளர்
உடல்நலக்குறைவால்
உயிர்விட்டதாக வந்த
குறுஞ்செய்தியை
ஊர்ஜிதப்படுத்தியது
தொலைக்காட்சிசெய்தி...
இன்னுமாய்
கடந்த காலத்திலும்
மரணம் வந்து
சென்ற சுவடுகளைக்
காண்கையில்
துளிர்த்து விடுகிறது..
கண்ணீர் சரம்சரமாய்..
இப்போதும்
மரணம் அடிக்கடி வந்து போகிற
சலையோரத்தில்தான்
எனது தினசரி பயணமும்..
சாதிக்க நிறைய இருக்கிறது..
சந்திப்பேன்..
சாவகாசமாய்..
No comments:
Post a Comment