Monday, February 01, 2010

புது திசை

மென் ஒளியில் 
கரைந்தொழுகும் 
என் இரவினை 
வண்ணமாகவும் 
வாசமாகவும் 
மாற்றிட 
சிறு தூரிகையும்..
ஒரு மலரும் 
தந்தாய்.. 

உன்னையே இரவாக 
சித்தரித்தேன்.. 
என்னையே இருளாக 
கத்தரித்தேன் 

விடியல் கண்டது
ஒரு புது இசையை..
விழிகள் கண்டது 
ஒரு புது திசையை .. 

No comments: