Wednesday, February 17, 2010

மீட்டெடு

உன் தொடர்பிலிருந்து
துண்டிக்கப்படும் போது
என் பூமியின்
ஈர்ப்புவிசை
ஒழுங்கற்றதாகிறது..

என் கடலின் அலைகள்
கரைகளால்
விழுங்கப்படுகிறது..

என் அமைதியை
சிதறடிக்கிறது
மீட்டெடு
யாவற்றிலுமிருந்து
காத்திருக்கிறேன்
யுகம் யுகமாய்
உன் வருகைக்காக..

No comments: