Monday, February 01, 2010

உன் குரல்

நம் சந்திப்பின் மூலமும் 
என் நேசிப்பின்
ஆழம் கூடியதும் 
என் நெஞ்சிற்குள் 
வேர் கொண்டதும் 
என் கண்களின் 
நீர் துடைத்ததும் 
இன்றென்னை 
தவிக்க வைத்ததும் 
உன் குரல் தானே 
நம்புகிறேன் நீதானென..
ஆயினும் இதயம் 
வெம்புகிறதே 
என் செய்வேன் சொல்லடா? 

No comments: