Wednesday, February 17, 2010

காற்றில் கலவாமலே

விலகிச் செல்வதின்
கணம் தாங்காமல்
அலையுறும் மனதின்
ஆற்றாமையைக்
கண்ணுறாமல் நகர்கிறாய்

மீண்டும் வெளியேற
எத்தனிக்கும் சொற்கள்
காற்றில் கலவாமலே
கரைந்து விடுகிறதென்
வெப்பத் தாக்குதலில்

சில சமயங்களில்
குழந்தையென புரண்டழுவதும்
சில சமயங்களில்
கட்டளையிடும் தொனியிலும்
வெளிப்படுமென் சொற்களில்
ஆங்காங்கே தூவியிருக்கிறேன்
உன் மீதான நேசத்தை..

நீயேயறியாத தருணத்தில்
உனக்குள் விழுந்து கிடக்குமது
உன் பார்வையின்
வழி கசிகிறது
நான் எதிர்படுகையில்..

No comments: