காதலர் தினத்தை முன்னிட்டு
வெளியாகும் அத்தனை
வார, மாத இதழ்களிலும்
காதல் கவிதைகளாக
வெளியாக என்னையும்
அனுப்பச் சொல்கிறாய்
உன்னைத் தவிர
வேறு யாருக்கும்
என் கவிதைகளைத் தர
விரும்புவதில்லை என்றேன்
ஏதோ புரிந்ததாய் சிரித்தாய்
என் கவிதையை விட ரசமானது
உன் சிரிப்பு
No comments:
Post a Comment