Tuesday, November 30, 2010

நேசம்

உனக்காக எழுதப்பட்ட
உன்னால் எழுப்பப்பட்ட 
கவிதைகளை 
புத்தகமாக்கும்   
முயற்சியில் 
இருவரும் தேர்ந்தெடுக்கிறோம்..
நான் வாசிக்க 
நீ ஆமோதிக்க 
ஆயிரம் கவிதையில் 
ஆறேழு கவிதை தவிர 
அத்தனையையும் 
தேர்ந்தெடுத்தோம்.. 
அத்துணை கவிதைகளும் 
ஏக்கத்துடன் பார்க்கின்றன.. 
நம்மை தேர்ந்தெடுத்த 
நேசம் அனாதையாய் அலைவதை.

2 comments:

Dhilip said...

Hey Bharathi great

Dhilip said...

hey bharathi , varthai illai sollurathukku