பலமுறை சொல்லியும்
அதைத் தான் செய்கிறதுன் நட்பு..
உனக்கு
பிடிக்காதென
நீ சொல்லாமலிருந்தும்
அதைச் செய்வதில்லையென் காதல்..
உனக்குப் பிடித்தவற்றை நானும்
எனக்குப் பிடிக்காதவற்றை நீயும்
செய்து வருகிறோம்.
இரண்டிலுமிருக்கும்
பிடிப்பே
நமக்கான பிணைப்பாகிறது..
1 comment:
காதல்,நட்பிற்குமான ஊடாடலாக இந்தக் கவிதை எனக்குப் பிடிக்கிறது..
Post a Comment