
இருசக்கர வாகனத்தில்
உன்னை ஏற்றிக் கொண்டு
செல்லும் போது
ஏதோ பேசுகையில்
மகிழ்வின் வெளிப்பாடாய்
உனக்கு சிறுஅடி கொடுத்துவிட்டு
வருத்தப்பட்டேன்
வீடு திரும்பிய பின்னும்..
அந்த சிறு அடி உனக்கும்
பிடித்திருந்தது என்றபோதுதான்
எனக்குள்
எடுத்து வைத்தாய்
முதல் அடியை..
No comments:
Post a Comment