Wednesday, September 15, 2010

சிறு அடி

இருசக்கர வாகனத்தில் 
உன்னை ஏற்றிக் கொண்டு 
செல்லும் போது
ஏதோ பேசுகையில் 
மகிழ்வின் வெளிப்பாடாய்
உனக்கு சிறுஅடி கொடுத்துவிட்டு
வருத்தப்பட்டேன் 
வீடு திரும்பிய பின்னும்..
அந்த சிறு அடி உனக்கும் 
பிடித்திருந்தது என்றபோதுதான் 
எனக்குள் 
எடுத்து வைத்தாய்
முதல் அடியை..

No comments: