தேவதை உங்களை வரவேற்கிறாள்...
இவளின் பயணங்கள் புதிது... பார்வைகள் புதிது...!
Tuesday, September 28, 2010
மழைத்துளி...
பெருமழை பெய்த
இரவொன்றில்
ஊடலிலிருந்த நமக்கிடையில்
விழுந்த மழைத் துளிகளை ஒன்றாக்கி
ஒற்றைவிரலால்
கோடு கிழித்து நதியாக்கி
உன் பக்கம் திருப்பினேன்..
அந்த நதியில்
நீந்தி வந்தென் கரை சேர்ந்தாய்..
வெளியே மழை சற்றே குறைந்திருந்தது..
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment