Wednesday, September 15, 2010

நானும் நீயும்

எனக்குப் பிடிக்காதென்று 
பலமுறை சொல்லியும்
அதைத் தான் செய்கிறதுன் நட்பு..

உனக்கு 
பிடிக்காதென 
நீ சொல்லாமலிருந்தும்
அதைச் செய்வதில்லையென் காதல்..

உனக்குப் பிடித்தவற்றை நானும் 
எனக்குப் பிடிக்காதவற்றை நீயும்
செய்து வருகிறோம்.
இரண்டிலுமிருக்கும் 
பிடிப்பே 
நமக்கான பிணைப்பாகிறது..

1 comment:

சு.சிவக்குமார். said...

காதல்,நட்பிற்குமான ஊடாடலாக இந்தக் கவிதை எனக்குப் பிடிக்கிறது..