சொற்களைத்
தொலைத்து விட்டேன்..
ஒரு மாலைப் பொழுதில்
ஒரு உணவக விடுதியிலிருந்து
வெளியேறிய போது..
சில நாட்கள்
தேடித் திரிந்தும்
கிடைத்தபாடில்லை..
பிறகு தேடுவதை
நிறுத்தி விட்டிருந்தேன்..
மீண்டும் ஒருநாள்
அதே உணவகத்தில்
ஒரு பாதி அலங்கரித்தும்
மறுபாதி சிதிலமடைந்தும்
சுழன்றாடிய சொற்கள்
அவனுக்கு அடிமையாயிருந்தன..
மீட்டெடுக்காமல்
விடைபெற்றேன்.
அடிமைப் பட்டுக் கிடக்குமென்
சொற்கள்
அவனை
ஆட்சிசெய்யக்கூடுமெனும்
அசைக்க முடியாத நம்பிக்கையுடன்..
1 comment:
இந்தக் கவிதையை கொஞ்சம் விளக்கிச் சொல்லலாமா...
Post a Comment