Wednesday, September 01, 2010

கால்டுவெல் முதல் தஸ்தாவெஸ்கி வரை

உன்னிடம்
எனக்கிருக்கும்
நேசத்தை
எப்போது உணர்ந்தேன்?
இரவுகளில்
தனிமையைத் தின்று தீர்க்க
ஆரம்பித்தாயே அப்போதா?
இதயத்தின் துயரங்களை
சுமக்க சம்மதித்தாயே
அப்போதா?
அருகருகே செல்கையில்
ஸ்பரிசித்துக் கொண்டோமே
அப்போதா?
கால்டுவெல் முதல் தஸ்தாவெஸ்கி வரை
மணிக்கணக்கில்
பரிமாறிக் கொண்டோமே அப்போதா?
நமக்கிடையேயான
முரண்பாடுகளிலும்
உடன்பட்டு பயணிக்கத்
தலைப்பட்டோமே அப்போதா?
இவையாவுமாகவும் இருக்கலாம்..
இதற்கும் மேலாக
முதன்முதலில்
உன்னைச் சந்தித்த
கணமிருக்கிறதே
அப்போதுதானிருக்கும்.

3 comments:

ராஜவம்சம் said...

நல்லா எழுதியிருக்கீங்க அனால் கடைசி வரியில எனக்கு உடன் பாடில்லை.

சு.சிவக்குமார். said...

நன்றாக இருக்கிறது...

தேவதை said...

அப்பாடா! 2010-ல் மட்டும் 300க்கும் மேற்பட்ட பதிவுகள்!
எந்த வாசகனுக்கும் வியப்பு தரக்கூடிய.. எந்த மேலதிகாரிக்கும் கோபம் தரக்கூடிய எண்ணிக்கை இது!