Saturday, June 12, 2010

இன்னும் ஒரே இரவு.

''துயர்மிகு வரிகளை இன்றிரவு 
நான் எழுதக் கூடும்"
பாப்லோ நெரூடாவின்
அந்த வரிகள் 
என்னை அழுத்திக் கொண்டேயிருக்கிறது.. 
  
நீ இரவாகும் போது 
நான் நிலவென்றும் 
நீ நிலவாகும் போது 
நான் இரவென்றும் 
நீயனுப்பிய 
குறுஞ்செய்திகள் 
வலியை அதிகப்படுத்துகிறது.. 

ஒவ்வொரு முறையும் 
உன் வரவால் 
அலங்கரிக்கப்பட்ட இரவு 
மூன்று நாட்களாக 
மூளியாயிருக்கிறது.. 

நீ வந்துவிட்டால் 
இனி ஒவ்வொரு இரவும் 
முழுநிலவின் உச்சம்.. 
உன் வருகைக்காக
என்னிடமிச்சமிருக்கிறது 
இன்னும் ஒரே இரவு..

No comments: