Saturday, June 12, 2010

உனக்குள்

நான் செல்லும் வழியெங்கும் 
உனக்கான கவிதைகளை 
விதைத்துச் செல்கிறேன் ..
நான் தொலைந்து போகும் 
ஒரு தருணத்தில் 
என் சொற்களில் ஏறி பயணி.. 
அந்த சொற்களின் முடிவு நீ 
புறப்பட்ட இடத்திலேயே 
உன்னைச் சேர்க்கும்.. 
ஆம்..
ஒருநாள் யார் புலன்களுக்கும் 
தெரியாமல் 
தொலைந்து போயிருப்பேன் 
உனக்குள் 

No comments: