Saturday, July 17, 2010

உன் ஸ்பரிசத்தில்

எப்போது 
கவிதை எழுதுவீர்களென
கேட்பவர்களுக்கு 
ஓரப்புன்னகையையும்
சமாளிக்கும் வார்த்தைகளையும்
பதிலிறுக்கிறேன்.. 
உன் நினைவென்னை
கொன்று போடும் சமயங்களில்
உன் ஸ்பரிசத்தில்
மூர்ச்சையுற்று மயங்கி சரிகையில் 
உன் ஓரிரு சொற்களென்
உயிர் குடிக்கையில் 
அடம்பிடித்து பிடிவாதமாய்
சண்டையிடுகையில் 
இப்படியான பதில்களையும் 
இதற்கு மேலானவற்றையும்
நீயே அறிவாய்..
துடிப்பறியும் இதயமாய்..

No comments: