Saturday, July 17, 2010

உடன்வர யாருமில்லை

என் இரவை
பகிர்ந்தளிக்க யாருமில்லை
என் தூக்கத்தை நீயே தூங்குகிறாய்..
என் உணவு வேளையில்
உடன்வர யாருமில்லை
என் பசிக்கும் சாப்பிட்டு விடுகிறாய்..
என் சிந்தனையைக் 
கேட்பதற்கு யாருமில்லை
எனக்கும் சேர்த்து சிந்திக்கிராய்
என் வாழ்க்கையை 
நீட்டிக்க விருப்பமில்லை
எனக்கும் சேர்த்து வாழ்ந்திருப்பாய்

No comments: